நாட்டில் எதிர்காலத்தில் லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் தெரிவித்துள்ளார். இதற்கு மாற்றீடாக பிளாஸ்டிக் அல்லாத லஞ்ச் சீட்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் எதிர்வரும் நவம்பர் 01 முதல் பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை வர்த்தமானியூடாக அறிவித்திருந்தது.மேலும் அடர்த்தியான பொலித்தீன் பைகள் மற்றும் அடர்த்தி குறைந்த பொலித்தீன் பைகள் ஆகியவற்றிற்கான விலைகளும் அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதேவேளை, வட மாகாணத்தில் லஞ்ச் சீட்டுக்கு பதிலாக வாழை இலைகளைப் பயன்படுத்துவதற்கான யோசனைகளும் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4