நாமல் ராஜபக்சவுக்கு எதிரான கிரிஷ் ஒப்பந்த வழக்கு ஏப்ரல் 02 விசாரணை !


கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ஏப்ரல் 02ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று வியாழக்கிழமை (19) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா முர்ஃபுருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதியான நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் வழக்கு, ஏப்ரல் 02 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.