இந்த சந்திப்பில் இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் ஆண்ட்றூ பற்றிக் உடனிருந்தார்.
கலந்துரையாடலின் போது நல்லிணக்கம், சர்வதேச நீதியியல் (Transnational Justice), மற்றும் தமிழர் சமூகங்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பிரதிநிதிகளின் குரல்கள் தொடர்ந்து கேட்கப்படுவதை உறுதிப்படுத்துவதிலும், நீதி மற்றும் சமத்துவத்தை முன்னிறுத்துவதிலும், அர்த்தமுள்ள முன்னேற்றத்துக்கு ஆதரவு வழங்குவதிலும் ஐக்கிய இராச்சியம் உறுதியாக இருப்பதாக பிரிட்டன் தரப்பு வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் நிலையான நல்லிணக்கமும், சமூக நீதி நடைமுறைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து இருதரப்பினரும் கருத்து பரிமாறிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




.jpeg)







