வாழைச்சேனை பிரதேசத்தில் பல வருடங்களாக நடைபெற்று வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: இருவர் கைது!


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியடி பிரதேசத்தில் உள்ள ஆற்றின் நடுவில் பல வருடங்களாக நடைபெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று அதிகாலை கிழக்கு மாகாண பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் சுற்றி வளைக்கப்பட்டது.

இதன்போது கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடா 7 இலட்சத்து 58 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா கைப்பற்றப்பட்டதுடன் 30 ஆயிரம் மில்லிலீட்டர் வடி சாராயமும் கைப்பற்றப்பட்டதுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை நாளை வாழைச்சேனை நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக கிழக்குமாகாண குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தெரிவித்துள்ளார்.