இந்தத் தகவல்கள் ஓர் ஆரம்பகட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டவையாகும் என குறிப்பிடப்படுகின்றது.
18 மாகாணங்களில் சுமார் 58 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன என்றும், இதில் தலைநகர் தெஹ்ரானிலேயே அதிகளவிலான சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இராணுவ உயிரிழப்புகள், உட்கட்டமைப்பு மற்றும் கல்வி நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் கடுமையான இணையத் துண்டிப்புகள் குறித்தும் அந்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.













