ஜெருசலேம் அருகே ஈரான் பாரிய ஏவுகணைத் தாக்குதல் - 9 பேர் பலி


இஸ்ரேலின் ஜெருசலேமிற்கு( Jerusalem )மேற்கே அமைந்துள்ள பகுதியொன்றின் மீது ஈரான் பலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

ஜெருசலேமிற்கு மேற்கே உள்ள பெய்ற் ஷெமேஷ் நகர் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 27 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் முன்னெடுத்த தாக்குதல்களில், இஸ்ரேலுக்குப் பாரிய சேதத்தை ஏற்படுத்திய மிகக் கடுமையான தாக்குதல் இதுவாகும் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.