இப்பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் சுமார் ஒரு மில்லியன் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கே அரசாங்கம் மிக உயர்ந்த முன்னுரிமை அளிப்பதாக அமைச்சின் ஊடக வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இலங்கை குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கையர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்
மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்கள் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
நம்பகமான உள்ளூர் ஊடகங்கள் மற்றும் அந்தந்த நாடுகளின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்க வேண்டும்.
அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், பாரிய அளவிலான பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் எனவும் கோரப்பட்டுள்ளனர்.
அருகாமையிலுள்ள இலங்கை இராஜதந்திர தூதரகங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும்.
கைபேசிகளை எப்போதும் முழுமையாக வலுவூட்டி (Charge) வைத்திருப்பதுடன், செல்லுபடியாகும் அடையாள ஆவணங்களை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
உதவி தேவைப்படும் இலங்கையர்களுக்காகப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களும் 24 மணிநேர அவசரத் தொடர்பிலக்கங்களைச் செயற்படுத்தியுள்ளன.
இலங்கையில் உள்ள குடும்பங்கள், மத்திய கிழக்கில் உள்ள தங்கள் உறவினர்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைச்சினால் பின்வரும் பிரத்தியேக 24 மணிநேர அவசர இலக்கங்கள் நிறுவப்பட்டுள்ளன
கொன்சியூலர் பிரிவு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு: +94742595546
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE): +94719802822
முழுநேர சேவைத் தொடர்பிலக்கம்: 1989
நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் அமைச்சு, தேவைக்கேற்ப மேலதிக தகவல்களை வெளியிடும் என அறிவித்துள்ளது.













