நாட்டிற்கு தெற்கே உள்ள கடல் பகுதியில், சந்தேகத்திற்கிடமான பொதிகள் மற்றும் ஆயுதங்களுடன் கூடிய பலநாள் மீன்பிடி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த படகில் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பல உறைகள் மற்றும் பெருமளவிலான ஆயுதங்கள் கடத்தப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட படகு மற்றும் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தற்போது கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, நாட்டை சூழவுள்ள கடல் பிராந்தியங்களை உள்ளடக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த சுற்றிவளைப்பும் அதன் ஒரு அங்கமாகவே இடம்பெற்றுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


_large.jpg)










