38 வயதான சுகீர்தன் தங்கராசா என்ற நபருக்கு எதிராக போர்ட்ஸ்மவுத் கிரவுன் நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. 2025 ஒகஸ்ட் 15 அன்று சவுத்தாம்ப்டனில் உள்ள 'ஹைஃபீல்ட் ஹவுஸ்' ஹோட்டலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது அலைபேசி வேலை செய்யாததால் ஆத்திரமடைந்த சந்தேகநபர், ஹோட்டல் வரவேற்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். "நான் இலங்கையைச் சேர்ந்தவன். இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த உங்களைப் போன்ற சிறிய மனிதர்கள் எனக்கு மரியாதை அளிக்க வேண்டும்" என அவர் இன ரீதியாக ஊழியர்களை இழிவுபடுத்தியுள்ளார்.
இந்த வாக்குவாதத்தின் போது அவர் தனது நிர்வாணத்தை வெளிப்படுத்தியதோடு, அதனைத் தடுக்க முயன்ற ஊழியர்கள் இருவரையும் தாக்கியுள்ளார்.
அநாகரீகமாக நடந்துகொண்டதை அவர் ஒப்புக்கொண்ட போதிலும், அது மற்றவர்களை அச்சுறுத்தும் நோக்கத்தில் செய்யப்படவில்லை என வாதிட்டார். இருப்பினும், சிசிடிவி ஆதாரங்களை ஆய்வு செய்த ஜூரி சபை அவரை குற்றவாளி எனத் தீர்மானித்தது.










.jpg)

.webp)
.webp)