எரிபொருள் தட்டுப்பாடு நிலவவில்லை ; மக்கள் அச்சப்படத் தேவையில்லை - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் !


தற்போது நாட்டுக்குத் தேவையான போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவே, பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எனவே, தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.