ஈரான் போர் முடிவுக்கு வருவது குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்திற்கு ஈரான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீதான இராணுவ நடவடிக்கைகளை எப்போது நிறுத்துவது என்பதைத் தாங்களே தீர்மானிப்போம் என ஈரான் இதன்போது தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிவித்திருந்தார்.
புதிய கடும்போக்குவாத உச்சநிலைத் தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ள இஸ்லாமியக் குடியரசானது (ஈரான்), உலகளாவிய எண்ணெய் விநியோகத்தைத் தடுத்தால் போர் தீவிரமடையக்கூடும் என்றும் ட்ரம்ப் அங்கு எச்சரித்திருந்தார்.
இருப்பினும், அதற்குப் பதிலளித்துள்ள ஈரான், போரை முடிவுக்குக் கொண்டுவரும் முடிவைத் தாங்களே எடுப்பதாகக் கூறியுள்ளது.
பிராந்தியத்தின் எதிர்காலம் தற்போது தெஹ்ரானின் படைகளின் கைகளிலேயே உள்ளது என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை வலியுறுத்தியுள்ளது.


.webp)










