கடற்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து, 939 கடல் அட்டைகள், 2 டிங்கி படகுகள் மற்றும் முக்குளிப்பு உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 முதல் 37 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


.jpg)









