உலக மரபுரிமையான சிங்கராஜா வனப்பகுதியின் குடவ பிரதான நுழைவாயில் நாளை (10) முதல் 15 ஆம் திகதி வரை ஆறு நாட்களுக்கு மூடப்படும் என சிங்கராஜ வன கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு விடுமுறை காரணமாக இவ்வாறு ஆறு நாட்களுக்கு சிங்கராஜா வனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் 16 ஆம் திகதி முதல் வழமை போன்று சுற்றுலாப் பயணிகளுக்காக பிரதான நுழைவாயில் திறக்கப்படும் என சிங்கராஜா வன கட்டுப்பாட்டாளர் எஸ்.டி. நிமல் தெரிவித்தார்.
எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் சிங்கராஜா வனத்தைப் பார்வையிடுவதற்காக குடவ நுழைவாயிலூடாக சுற்றுலாப் பயணிகள் வருகை தர முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்


.jpg)









