
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் தாந்தாமலை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது பயிர்ச்செய்கைக்கு நீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரைப் பொருத்த முயன்றபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.











