கொள்ளுப்பிட்டி, காலி வீதியில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றினை முற்றுகையிட்ட பொலிஸார், உரிமமின்றி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 வெளிநாட்டவர்களைக் கைது செய்துள்ளனர்.
நேற்றிரவு (27) கைது செய்யப்பட்டவர்கள் 27 முதல் 48 வயதுக்கு இடைப்பட்ட சீனப் பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.