உலக புகையிலை எதிர்ப்பு தின விசேட நிகழ்வு நாளை (15) கொழும்பில் நடைபெறவுள்ளது.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நாளை முற்பகல் இந்த விசேட நிகழ்வு நடைபெறவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
புகையிலை தொழில்துறையின் சூழ்ச்சிகளை வெளிப்படுத்துவோம், புகையிலை மற்றும் நிகோடின் தயாரிப்புகளுக்கு எதிராக நிற்போம்' என்பதே இந்த ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருளாகும்.
புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31ஆம் திகதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.








.jpeg)
.jpeg)



