.jpg)
இலங்கையில் டெங்கு காய்ச்சலின் பரவல் நடப்பு ஆண்டில் கணிசமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. நேற்று சனிக்கிழமை (04) நள்ளிரவு வரையிலான தரவுகளுக்கமைய, நாடு முழுவதும் 59,638 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 39 மரணங்களும் பதிவாகியுள்ளன.
தற்போது மரண வீதம் 0.07% ஆகக் காணப்படுகிறது.
இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் மிக அதிகமாக 21,546 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
ஜூலை மாதத்தின் முதல் நான்கு நாட்களிலேயே 4,251 நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாகாண ரீதியில் அவதானிக்கும் போது, மேல் மாகாணம் 31,249 நோயாளர்களுடன் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 12,158 பேரும், கம்பஹாவில் 11,925 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 142 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு பரவும் அதிவேக அபாய வலயங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளன.






.jpg)






