
தீயணைப்புப் படையினர், பொலிஸார், முப்படைகளின் வீரர்கள், வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆகியோர் இணைந்து இந்தத் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்தத் தீ விபத்தினால் யாருக்கும் எவ்வித உயிராபத்தோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை.
விகாரைக்கோ அல்லது அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கோ எந்தவிதமான சொத்துச் சேதங்களும் ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட இந்த வனப்பகுதியில் தீப்பிடித்ததற்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.






.jpg)






