யட்டியந்தோட்டை பொலிஸ் போக்குவரத்துப் பொறுப்பதிகாரியின் காணாமல் போன துப்பாக்கி கண்டுபிடிப்பு




யட்டியந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியின் காணாமல் போன உத்தியோகபூர்வ துப்பாக்கி,யட்டியந்தோட்டை பாலத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பொலிஸ் கடற்படை பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 27ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பாக போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபர் ருவான்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.