22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு முற்றிலும் தவறானது – சம்பிக்க ரணவக்க



அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு முற்றிலும் தவறானது. இந்த சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் எவருக்காகவும் தீர்மானத்தை மீளப்பெற போவதில்லை என்று குறிப்பிடுவது நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட தயார் என்று ஜனாதிபதி மறைமுகமாக குறிப்பிடுவது வெளிப்படுகிறது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (27) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது நிலைப்பாட்டை நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இந்த தீர்மானத்தை மீளப்பெற போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

எவ்விதமான விரிவான கலந்துரையாடல்களும் இல்லாமல் நீதிபதிகளின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடுமையான எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. தீர்மானத்தை மீள் பரிசீலிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். அவ்வாறாயின் நிலைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் குறுகிய தரப்பினரா,

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு முற்றிலும் தவறானது. இந்த சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் எவருக்காகவும் தீர்மானத்தை மீளப்பெற போவதில்லை என்று குறிப்பிடுவது நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட தயார் என்று ஜனாதிபதி மறைமுகமாக குறிப்பிடுவது வெளிப்படுகிறது.

நீதிபதிகளின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு அதிகரிப்பதற்கு அரசாங்கத்துக்கு சாதகமாக அமையுமே தவிர நாட்டு மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்காது. நீதித்துறை அரசியல் மயப்படுத்தும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நீதித்துறையை மாற்றியமைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது இது முற்றிலும் தவறானது என்றார்.