தண்ணீர் என நினைத்து இரசாயன திரவத்தை அருந்திய 3 வயது சிறுமி உயிரிழப்பு


வவுனியாவைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி ஒருவர், கம்பளை – டெல்டாவத்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் பால் பதப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் இரசாயன திரவத்தை தண்ணீர் என நினைத்து அருந்தியதால் உயிரிழந்துள்ளார்.

வவுனியா, செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி, தனது பெற்றோருடன் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தபோதே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று பிற்பகல் உறவினர்கள் வீட்டின் முற்றத்தில் கூடியிருந்தபோது, வீட்டிற்குள் சென்ற சிறுமி ஜன்னல் பகுதியில் ஏறி அங்கு வைக்கப்பட்டிருந்த இரசாயன திரவத்தை தண்ணீர் என நினைத்து அருந்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

கம்பளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையிலும், இரசாயன திரவத்தை அருந்தியதால் ஏற்பட்ட விஷத்தன்மையே உயிரிழப்புக்குக் காரணம் என தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.