குறித்த உணவகத்தில் அதிகூடிய விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை செய்யப்படுவதாக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக , மேற்கொள்ளப்பட்ட சோதனையில் விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை அடுத்து குறித்த உணவகத்திற்கு எதிராக , யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை(25) நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது உணவக உரிமையாளருக்கு 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம் , அபராத பணத்தினை செலுத்த தவறின் 06 மாத கால சிறைத்தண்டனை வழங்கப்படுமென உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை குறித்த உணவகத்தில் முன்னரும் அதிக்கூடிய விலைக்கு குடிநீர் விற்ற குற்றத்திற்காக நீதிமன்றத்தினால் அபராதம் அறவிடப்பட்ட நிலையில், மீண்டும் அதே குற்றத்தை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





.jpg)
.jpg)
.jpg)


.jpg)

