இன்று (04) இரவு 8.10 மணியளவில் முகத்தை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விளையாட்டரங்கிற்கு அருகில் உள்ள வெதுப்பக உரிமையாளர் ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், அந்தச் சந்தர்ப்பத்தில் துப்பாக்கி இயங்கவில்லை.
இதன்போது, வெதுப்பக உரிமையாளர் துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபருடன் போராடி, அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்துள்ளார்.
பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், வெதுப்பக உரிமையாளர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.





.jpg)






.jpg)

