முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சேவைக்கால கொடுப்பனவு வழங்குவதற்கான கலந்துரையாடல்

by.f.m.farhan
கிழக்கு மாகாண முதலமைச்சரின் பணிப்பின் பேரில் கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சேவைக்கால கொடுப்பனவு வழங்குவதற்கான கலந்துரையாடல் மட்ஃமாநகர சபை கேட்போர் கூடத்தில் முன்பள்ளி பணிமனையின் தவிசாளர் நடராஜா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு; நடைபெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கருத்துத் தெரிவிக்கையில், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கான முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சேவைக்கால கொடுப்பனவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து அவை தொடர்பில் மீள் பரிசீலணை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி பணிமனை பணிப்பாளர் கோபாலகிருஸ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.




--