பணி மாற்றமாகி செல்லும் அருட்பணி j .a .g ரெட்ணகுமார் அடிகளுக்கு பிரியாவிடை நிகழ்வு.

வ.சுரேஷ்கண்ணா.
மட்/புளியந்தீவு தூய மரியாள் இணைப்பேராலயத்தில் கடந்த 6
வருடங்களாக பங்குத்தந்தையாக பணியாற்றி வீச்சுகல்முனை
தூய அன்னம்மாள் ஆலயத்துக்கு பணி மாற்றமாகி செல்லும் 
அருட்பணி j .a .g .ரெட்ணகுமார் அடிகளாருக்கு பிரியாவிடை நிகழ்வு 
இணைப்பேராலய மறையாசிரியர்களால்[26.02.2012]
ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது
பங்குத்தந்தைக்கு மாணவர்கள்  மாலை அணிவித்து பூச்செண்டுகள் வழங்கி தமது
நன்றியைத்தெருவித்தார்கள்,புதியபங்குதந்தை j .s  மொறாயஸ் அடிகளாரும்
மாணவர்கள் ஆசிரியர்களால் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டார்.
மறையாசிரியர் ஒன்றியத்தினரால் நினைவுசின்னமும் நினைவு
அட்டையும் வழங்கப்பட்டது.பங்குத்தந்தை எல்லோருக்கும் தமது 
நன்றிகளை தெரிவித்தார். துணைபங்குதந்தை அருட்பணி s .a .x . தேவசீலன் cma
நிகழ்வுகளுக்கு தலைமைதாங்கினார்.





--