திருக்கோவில் கால்நடையாளர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்

(அபிவரன்)
திருக்கோவில் பிரதேசத்தில் வட்டமடு மேச்சல் தரைக்கு சொந்தமான நிலப்பரப்பில் வேளாண்மை செய்வதற்கு ஒரு தலைப்பட்சமாக  விவசாயிகளுக்கு வனபரிபாலன சபை அனுமதி வழங்கியதற்கு கால்நடையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வட்டமடு பிரதேசத்தில் இன்று காலையில் இருந்து சாகும்வரை உண்ணாவிரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்
கடந்த 1976ம் ஆண்டு வர்த்தமானியில் 4 ஆயிரம் ஏக்கர்நிலப்பரப்பு கால்நடைகளுக்கு ஒதுக்கப்பட்டது இந்நிலையில்  விவசாயிகள் அத்துமீறி நிலப்பரப்பை ஆக்கிரமித்து வேளாண்மை நடவடிக்கை ஈடுபட்டுவந்த நிலையில் கடந்த மாதம் 19 ம் திகதி திருகோணமலை அரசாங்க அதிபர் காரியாலத்தில் மட்டக்களப்பு ,அம்பாரை, திருகோணமலை மாவட்டங்களின் கால்நடைகளுக்கான மேச்சல் தரை தொடர்பாக அமைச்சர் சுனில் பிரேமஜெயந்த தலைமையில் கலந்துரையாடல் ஓன்று இடம்பெற்றது
இதில் அமைச்சர்களான அதாவுல்லா, ரவூப்ஹகீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகானசபை அமைச்சர்கள் ஊறப்பினர்கள் பிரதேச செயலாளர்கள் உட்ப் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர் இதன்போது இங்கு விசேடமாக அம்பாரை வட்டமடு மேச்சல்தரை பிரச்சனை கலந்துரையாடப்பட்டது இதில் அமைச்சர் சுனில் பிரேமஜெயந்த இது ஒரு கலந்துரையாடல் எனுவும் இதற்கான தீர்வு இங்க வழங்கப்படமாட்டாது எனவும் வட்டமடு மேச்சல் தரை தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழு கலநிலவரங்களை பார்வையிட்டு அதன் பின்னர் அம்பாரை கச்சேரியில் கலந்துரையாடல் நடைபெற்று பினர் தீர்வு காணப்படும் என தெரிவித்து தீர்மானிக்கப்பட்டது
இவ்வாறு தீர்மானிக்கப்பட்ட பின்னர் வட்டமடு மேச்சல் தரை பிரதேசத்தில் உள் 4 கண்ங்கள் உள்ளிட்ட 1380 ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்வதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் அனுமதிவழங்குமாறு வனபரிபாலன சபையின் தலைவருக்கு பணிக்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இவ் அனுமதியானது ஒருதலைப்பட்சமானது என கண்டித்து ஆலைடிவேம்பு. திருக்கோவில். ,அக்கரைப்பற்று ,அட்டாளைச்சேனை பிரதேச கால்நடை வளர்ப்பு சங்கங்கத்தினர்  இதனை மீள்பரீசிலனை செய்யவேண்டும் எனவும் இல்லாவிடில் 40 ஆயிரம் கால்நடைகளை அரசுபெறுப்பேற்று கால்நடையாளர்களுக்கு நஷ்டஈட்டை வழங்க வேண்டும் என இதற்கான தீர்வு கிடைக்கும்வரை சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றதுடன்
இவ் உண்ணாவிரத போராட்டத்தில் மஹிந்த சிந்தனையில் பால் உற்பத்தியை அதிகரிகவேண்டும் என தீர்மானிக்கப்பட்டபோதும் இத் தீர்மானத்துக்கு மாறாக அம்பாரை மாவட்டத்தில் பால்உற்பத்தியை மழுங்கடிக்கப்படுகின்றது, வட்டமடு மேச்சல் தரையில் நீதி நித்திரை கொள்கின்றதா,  போன்ற சுலோகங்கள் தாங்கழியவாறு 50 மேற்பட்டோர் இன்று ஞாயிற்றுக்கிழமை காரை 6.00 மணியில் இருந்து போராட்டத்தை ஆரம்பித்து ஈடுபட்டுவருகின்றனர்