ஜூலை முதலாம் திகதியிலிருந்து பஸ் கட்டணம் அதிகரிக்கப்படலாம்

ஜூலை முதலாம் திகதியிலிருந்து பஸ் கட்டணம் அதிகரிக்கப்படலாம் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

குருநாகலில் நடைபெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வருடாந்த பஸ் கட்டண திருத்ததிற்கு அமைய பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம் 6 வீதத்திலிருந்து 6.5 வீதம் வரை பஸ் கட்டணம் அதிகரிக்கப்பு மேற்கொள்ளப்படும் என பிரதியமைச்சர் கூறியுள்ளார்.

பஸ் கட்டண மீளாய்வு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.