மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரத்தில் கைவிடப்பட்ட பற்றைக் காணியினுள் இருந்து குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலத்தினை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜ.பி.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
கல்மடு மருத நகர் விநாயகபுரத்தினைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான இராசைய்யா ரவிச்சந்திரன் வயது 38 என்பவரது சடலமே இவ்வாறு இன்று வெள்ளிக்கிழமையன்று மீட்கப்பட்டுள்ளதாக தடயவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
வீட்டை விட்டு நேற்று வியாழக்கிழமை நண்பகல் வேளை வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லையென்றும் அன்றைய தினம் மாலை 5 மணியளவில் தம்முடன் தொலைபேசியில் இறுதியாக தொடர்பு கொண்டு பேசியதாகவும் அதன் பின்னர் அவரது தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டு காணப்பட்டதாக மரணமடைந்தவரின் மனைவி தமது மரணவிசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளதாக மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஸ் ஆனந்த தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பிரேத பரிசோதனைக்காக சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கல்மடு மருத நகர் விநாயகபுரத்தினைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான இராசைய்யா ரவிச்சந்திரன் வயது 38 என்பவரது சடலமே இவ்வாறு இன்று வெள்ளிக்கிழமையன்று மீட்கப்பட்டுள்ளதாக தடயவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
வீட்டை விட்டு நேற்று வியாழக்கிழமை நண்பகல் வேளை வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லையென்றும் அன்றைய தினம் மாலை 5 மணியளவில் தம்முடன் தொலைபேசியில் இறுதியாக தொடர்பு கொண்டு பேசியதாகவும் அதன் பின்னர் அவரது தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டு காணப்பட்டதாக மரணமடைந்தவரின் மனைவி தமது மரணவிசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளதாக மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஸ் ஆனந்த தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பிரேத பரிசோதனைக்காக சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.