வயல் பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள குக்குளாவத்தை வயல் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று  (11) காலை 10.00 மணிக்கு மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கோவில் போரதீவு முருவன் கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய கனகநாயகம் நவன் என்பவரே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சம்பவ தினமான நேற்று முன்தினம்  (10) மாலை வீட்டை விட்டு சைக்கிளில் வெளியில் சென்றுள்ளார்.

இவர் இரவு வீடு திரும்பாததை அடுத்து உறவினர்கள் இவரை தேடிய நிலையில் குக்குளாவத்தை வயல் பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.