தாய் மரணம் ! தந்தையோடு சிறைக்கு செல்ல முயற்சித்த மகள் ! அனைவரையும் கண்கலங்க வைத்துள்ள சம்பவம்

கிளிநொச்சியைச் சேர்ந்த அரசியல் கைதியான தந்தை சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய போது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறியுள்ள சம்பவம் அனைவரினது மனதையும் நெகிழ வைத்துள்ளது..


கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்ப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.

இவரின் இறுதி நிகழ்வு இன்று(18) கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ஆனந்தசுதாகர் அழைத்து வரப்பட்டு மூன்று மணித்தியாலயங்கள் மனைவியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த பின்னர் மீண்டும் பொலிஸாரால் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளார்.

தந்தை சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய போது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறியுள்ளார் இச் சம்பவம் அனைவரினது மனதையும் நெகிழ வைத்துள்ளது..

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான ஆனந்த சுதாகருக்கு மகனும், மகளும் என இரண்டு பிள்ளைகள்.

தந்தை 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பின்னர் தாயின் அரவணைப்பில் வாழந்த இரண்டு பிள்ளைகளும் தற்போது தந்தையை பிரிந்தும் தாயை இழந்துமுள்ளனர்.

பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு  ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர்.


இவரது நண்பர் , உறவினர்களை நாம் தொடர்பு கொண்டோம் .
எமக்கு கிடைத்த தகவலின் படி .
 இவரது நண்பர் , உறவினர்களை நாம் தொடர்பு கொண்டோம் . 

எமக்கு கிடைத்த தகவலின் படி . 
கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்த இவர் முன்னாள் போராளியாக ( புலனாய்வு பிரிவில் ) இருந்து பின் TRO வில் சேவை புரிந்துள்ளார். 
இவரோட இருந்த மற்றவர்கள் வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர் . இவரிடம் பணம் இல்லாததால். இவரால் போக முடியவில்லை. நண்பர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது இங்க பிரச்சனையில்ல இருக்கலாம் என நம்பி இருந்து இருக்கிறார். சாரதியாக பணியாற்றியுமுள்ளார் . பின்பு கைதாகியுள்ளார்.   என்ன செய்வதன அறியாமல் கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், வலுக்கட்டாயமாக நிர்பந்திக்கப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்திட வைக்கப்பட்டார்.

இவர் செய்ததாக கூறப்பட்ட குற்றங்களுக்கு எதிராக எந்தவிதமான சரியான சாட்சிகளோ, ஆதாரங்களோ நீதிமன்றத்தில் பொலிஸாரால் நிறுத்தப்படவில்லை. அவருக்காக நீதிமன்றத்தில் வாதாடிய சட்டத்தரணிகளின் அசமந்தமே ஒரு அப்பாவியை ஆயுள் தண்டனைக் கைதியாக்கியது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 8 ஆம் இலக்க அறையில், வழக்கு இலக்கம் HC6656-13 மீது நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளிக்கிறார்.

இவரது நண்பர் கூறுகையில் இவர் இயக்கத்தில் இருந்த மட்டும் தான் ஒரு கொலையும் செய்யவில்லை. புலானாய்வு பிரிவில் ஒரு முக்கியமானவருக்கு கீழே வேலை செய்தவர் .  இவரோட பழகியவர்களை கேட்டு பாருங்கள். உண்மையிலே நல்ல ஒருவர்.என கூறி கண் கலங்குகிறார் . 
 மரண இறுதி நிகழ்வில் சிறைசாலை அதிகாரிகளும் கண்கலங்கி இருந்தனர்.  

 மரண சடங்குகள் முடிந்த பின்னர் மூத்த மகன் மயானத்திற்கு கொள்ளி வைப்பதற்காக சென்ற வேளை அரசியல் கைதியான சுதாகரன் மீண்டும் சிறைக்கு திரும்பவதற்காக சிறைச்சாலை வாகனத்தில் ஏறினார். அவ்வேளை, யாரும் சற்று எதிர்பார்க்காத விதமாக அவரது 10 வயது நிரம்பிய மகளும் சிறைச்சாலை வாகனத்திற்குள் ஏறிவிட்டார்.

தந்தையின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது மகள் ஏறியமை அனைவரதும் மனத்தை நெகிழ வைத்துள்ளது. பலரது மனங்களை இந்த சம்பவம் நொருக்கிவிட்டது. வலுக்கட்டாயமாக மகளை சிறைச்சாலை அதிகாரிகள் பிடித்து கீழிறக்கும் போது ஒன்றுமே அறியாத அந்த குழந்தை தன் தந்தையை பார்த்து “அப்பா நாளை மறுதினம் மீண்டும் வருவீர்களா அப்பா” என சுதாகரிடம் கேட்டது கொடுமையின் உச்சகட்ட நிமிடமாக உணரப்பட்டது.

இவருடைய வழக்குக்கான தாய் சுமதி சொத்துக்களை விற்று வாதாடி வந்த நிலையில் தற்போது வசிப்பதற்கு வீடின்றி உள்ளார்.


ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க ஏதாவது வழி இருக்கா என பார்ப்போம்.   ஜனாதிபதி நினைத்தால் இவரை விடுதலை செய்யலாம்.