பல்கலைக்கழக மருத்துவ பீடங்களின் அபிவிருத்திக்கென நிதி ஒதுக்கீடு


பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களின் அபிவிருத்திக்கென அரசாங்கம் தொள்ளாயிரம் மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

கிழக்கு, ரஜரட்ட, பேராதனைப் பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களுக்குத் தேவையான வசதிகள் இதன் மூலம் செய்யப்படவுள்ளன.

இதேவேளை, இலங்கையின் வைத்தியசாலைகளின் சுகாதார வசதிகளை மேம்படுத்தவென ஒஸ்திரியா ஆயிரத்து 810 மில்லியன் ரூபா பெறுமதியான வட்டியில்லாக் கடனை வழங்கியிருக்கிறது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிதியமைச்சில் கடந்த பதன்கிழமை கைச்சாத்திடப்பட்டன.