மாட்டிறைச்சி சாப்பிட கூடாது! கடைக்கு நிரந்தர பூட்டு போட்ட தேரரின் செயலுக்கு ஆதரவு!


மத்துகம பொது சந்தையில் இயங்கி வந்த மாட்டிறைச்சிக்கடையை நிரந்தரமாக மூடுவதற்காக முன்வைக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்துகம பொது சந்தையில் இயங்கி வந்த மாட்டிறைச்சிக் கடையை நிரந்தரமாக மூடுவதற்கான பிரேரணையை பிவித்துரு ஹெல உறுமயவின் நாரவில சமித்தவஞ்ச தேரர் பிரதேச சபையில் முன்வைத்தார்.

மத்துகம பொது சந்தையில் இயங்கும் மாட்டிறைச்சி கடைக்கு 2019 ஆம் ஆண்டுக்கான அனுமதி பத்திரத்தினை வழங்குவது தொடர்பில் சபையில் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் அவர் அந்த பிரேரணையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த தீர்மானம் தொடர்பில் மத்துகம பிரதேச சபை உறுப்பினர்களுக்கிடையில் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் குறித்;த பிரேரணைக்கு ஆதரவாக 28 பேர் வாக்களித்ததுடன், மூவர் எதிராகவும், வாக்களித்திருந்தனர்.

அத்துடன் மேலும் மூவர் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளவி;ல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பிரேரணை 22 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.