மயிலம்பாவெளிக் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய தயாநிதி வசந்தகுமார் எனும் குடும்பப் பெண்ணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
செங்கலடியிலுள்ள நகைக் கடை ஒன்றில் கணக்காளராக இவர் வேலை பார்த்து வந்துள்ளதோடு இவருக்கு 8 ஆம் தரத்தில் கற்கும் ஒரு பெண் பிள்ளையும் உண்டு என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் உடற்கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.