வாழைச்சேனையில் பெண்ணொருவர் உட்பட 5 பேர் கைது..!



வாழைச்சேனை - விபுலானந்தா வீதியில் 16 கிலோ கிராம் கேரள கஞ்சா தொகையுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதியில் பயணித்த மகிழுந்து ஒன்றை சோதனையிட்ட போது குறித்த கஞ்சா தொகை மீட்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுள் பெண்ணொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா , சாலியபுர , மதவாச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்