மட்டக்களப்பில் விநாயகர் சதுர்த்தி திருநாளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆயுள் வேண்டி பிரார்த்தனை


( சிஹரா லத்திப்)
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடாத்தப்பட்ட விசேட பூஜை யில் நாட்டுக்கு நல்லாசி மற்றும், பிரதமர் ரணில்விக்கி ரமசிங்க வுக்கு ஆயுள் வேண்டியும் நல்லாட்சி நிலைத்திருக்க வேண்டியும் விசேட பூஜை வழிபாடொன்று மட்டக்களப்பு கல்லடி திருச் செந்தூர் முருகன் ஆலயத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வே,மகேஸ்வரன் தலைமையில் இந்த விசேட பூஜை நேற்று மாலை இடம்பெற்றது.

ஆலயத்தின் பிரதம பூசகர் சபரீதசைன்ய குரு இந்த விசேட பூஜையை நடாத்திவைத்தார். இதேவேளை விநாயகப்பெருமானின் பிறந்ததினத்தை கொண்டாடும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுமட்டக்களப்பு கல்லடிப் பிரதேசத்தில்இன்றுமாலை வினாயகர்பெருமான் வெளிவீதி உலா ஊர்வலமும் இடம்பெற்றது .

இந்து பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.