செங்கலடி மத்திய கல்லூரி மாணவனைத் தாக்கிய கணித பாட ஆசிரியர் ! மாணவனுக்கு காயத்தால் எட்டு தையல் !



மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை கணிதபாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தாக்கியதால் மாணவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியில் கடமையாற்றும் உசைன் எனும் கணித பாட ஆசிரியர் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கணித பாடத்திற்கான நூலினை எடுத்து வராமைக்காக பலகையினை கொண்டு தலையில் மற்றும் கண் பகுதியில் தாக்கியுள்ளதாகவும்,

தாக்குதலுக்கு இலக்கான மாணவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதோடு எட்டு தையல்களும் இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இந்த சம்பவத்துடன் தொடர்புடடைய ஆசிரியரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த மாணவனின் தாக்குதல் தொடர்பாக கூறும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.