செலான் வங்கியின் 210 வது தன்னியக்க பணம் பரிமாற்றும் இயந்திர நிலையம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது




செலான் வங்கியின் 210 வது ( ஏ.ரி.எம் ) தன்னியக்க பணம் பரிமாற்றும் இயந்திர நிலையம் இன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது

மட்டக்களப்பு நகருக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி மட்டக்களப்பு செலான் வங்கியின் நகர கிளையினால் 210 தன்னியக்க பணம் பரிமாற்றம் செய்யும் இயந்திர நிலையம் மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்தில் அமையப் பெற்றுள்ள சுற்றுவட்ட அருகாமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது .

மட்டக்களப்பு செலான் வங்கியின் நகர கிளையின் முகாமையாளர் கே .கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் வைத்தியர் கருணாகரன் அதிதியாக கலந்துகொண்டு இதனை திறந்து வைத்தார் .\

இந்நிகழ்வில் செலான் வங்கியின் மட்டக்களப்பு நகர கிளையின் வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்