மட்டக்களப்பு பூநொச்சிமுனை முபீன் உள்ளக வீதியினை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு



சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்களின் சிபாரிசில் துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு பூநொச்சிமுனை ULMN. முபீன் உள்ளக வீதியினை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது .

பிரதம அதிதியாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா அவர்கள் கலந்து கொண்டதுடன் மட்டக்களப்பு மாநகர மேயர் சரவணபவன் , மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தயாபரன் ,முஸ்லீம் காங்கிரசின் கொள்கை பரப்பு செயலாளரும் நகர திட்டமிடல் , நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் இணைப்பு செயலாளருமான முபீன் , முன்னாள் தவிசாளர் மர்சூக் அஹமட்லெப்பை உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர் -