ஷங்கரிலா தாக்குதல்தாரி அடையாளம் காணப்பட்டார் - நிறுவமொன்றின் உரிமையாளரான இன்சான் சீலவனன்

கொழும்பிலுள்ள ஷங்ரிலா ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுதாரி, அவிசாவளை - வெல்லம்பிட்டி வீதியிலுள்ள நிறுவமொன்றின் உரிமையாளரான இன்சான் சீலவனன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில், பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர்.

குறித்த நிறுவனத்தின் 9 ஊழியர்கள், வௌ்ளம்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை எதிர்வரம் 6ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டை வெடிக்கவைத்த சந்தேகநபருக்கும் தெமட்டகொடையில் தற்கொலை குண்டை வெடிக்க வைத்த நபருக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகிப்பதாக, நீதிமன்றத்தில் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
உலகையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு படுகொலை - ஒரு பார்வை CLICK HERE TO READ  
 LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்
குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான செய்திகளை உடனுக்குடன்   பேஸ்புக் ஊடாக தெரிந்துகொள்ள எமது பக்கத்தை லைக் செய்துகொள்ளுங்கள்

செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்