மட்டக்களப்பு சீவோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்டவர் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது
இத் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டவர் காத்தான்குடி 6ம் பிரிவு தைக்கா வீதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டதுடன் இவர் தௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர் எனவும் கடந்த 2007 ம் ஆண்டு காத்தான்குடியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர் எனவும் பொலிசாரால் தேடப்பட்டு வந்துள்ளவர் எனவும் கடந்த 12 திகதி வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு நாடுதிரும்பிய இவர் கடந்த 16 ம் திகதி காத்தான்குடியில் வாழ்ந்து வந்த மனைவி மற்றும் 4 வயதுடைய ஒரு குழந்தையையும் காத்தான்குடியில் இருந்து கூட்டிச் சென்றுள்ளார். என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும்
இவரின் மனைவியை பாணந்துறைப் பகுதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாகவும் இவரின் மனைவியின் தாயார் தந்தையாரை காத்தான்குடியில் வைத்து கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிஜடி யினர் மேற்கொண்டு வருகின்றனர்
உலகையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு படுகொலை - ஒரு பார்வை CLICK HERE TO READ
LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்
குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் ஊடாக தெரிந்துகொள்ள எமது facebook பக்கத்தை லைக் செய்துகொள்ளுங்கள்
செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல் தெரிந்துகொள்ள
0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள்
உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்
உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்