ஜனாதிபதி தேர்தலில் மூன்று பேருக்கு மேல் போட்டியிட்டால் செல்லுபடியாகும் வாக்குகளில் 50% பெறுபவரே வெற்றி


ஜனாதிபதி தேர்தலில் மூன்று பேருக்கு மேல் போட்டியிட்டால்

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் மூவர் அல்லது அதற்கு அதிகமானவர்கள் போட்டியிடுவார்களேயானால் செல்லுபடியாகும் வாக்குகளில் 50 வீதமான வாக்குகளை வெற்றிபெறும் வேட்பாளர் பெற்றுக்கொள்ளுவது அவசியமென தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அவரது முகநூலில் அவர் இந்த விடயங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக செல்லுபடியாகும் வாக்குகளிலிருந்து ஐம்பது வீதத்தை ஒருவர் பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு 50 வீத வாக்குகளை எவரும் பெறமுடியாத விடத்து மேற்கொள்ளப்படும் தீர்மானம் தொடர்பில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு தேர்தல்கள்

ஆணைக்குழுவின் தலைவர் பதிலளிக்ைகயிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்கு தாம் இவ்வாறு பதிலளித்ததாகவும், அவர் தமது முகநூலில் தெரிவித்துள்ளார்.

முகநூலில் அது தொடர்பான கேள்வியும் பதிலும் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் செல்லுப்படியாகும் வாக்குகளில் 50 சதவீதத்தை பெற்றுக் கொள்வதற்கு எந்த வேட்பாளர்களினாலும் முடியாது போனால், மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்,

அவ்வாறு மீண்டும் வாக்களிப்புக்கான அவசியம் கிடையாது. மூன்று வேட்பாளர் அல்லது அதற்கு அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டால் மட்டுமே செல்லுப்படியாகும் வாக்குகளிலிருந்து 50 வீதத்தை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் போது, வாக்காளர்கள் தமது விருப்பப்படி விருப்பு வாக்குகளை வேட்பாளருக்கு 1, 2, 3 என்ற இலக்கத்தை பிரயோகித்து விருப்பு வாக்கை அளிக்க முடியும்.

ஒரு வேட்பாளருக்கு மட்டுமே விருப்பு வாக்கு அளிக்க வேண்டுமானால் 1 என்ற இலக்கத்தை மட்டும் பிரயோகிக்க முடியும் அல்லது வழமை போன்று (X) எதிரே வாக்களிக்க முடியும். A, B, C, D, E என ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்டால் அனைத்து செல்லுப்படியான வாக்குகளில் நூறு என நாம் கிரகித்துக் கொண்டால், அதன் போது அந்த வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகளை A = 40, B = 35, C = 15, D = 6, E = 4 என இந்த முறைப்படியே தெரிவு செய்யப்பட்டால், A மற்றும் B முதல் இரண்டு பேராவார்கள். ஏனைய C, D, E ஆகியோர் போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.

முதல் மட்டும் இரண்டாவது இடங்களை பெற்றுக் கொள்ளும் A மற்றும் B ஆகியோரின் வாக்குச் சீட்டில் புள்ளடியிடப்பட்டுள்ள விருப்பு வாக்கு தொடர்பில் கவனம் செலுத்தப்படமாட்டாது. அதனையடுத்து, 15 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ள C என்பவரின் வாக்குச் சீட்டு அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படும். C என்பவருக்காக புள்ளடியிட்டுள்ள வாக்குகள் அன்றி ஏனையவை கவனத்தில் கொள்ளப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.