மட்டக்களப்பில் விபத்தில் இருவர் பலி !

மட்டக்களப்பு நாவற்குடாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

ஏறாவூரில் இருந்து   கோழிகளை ஏற்றிச் சென்ற வாகனம்    நாவற்குடா பிரதான வீதியில் மணல் ஏற்றிக்கொண்டு முன்னால் சென்ற டிப்பர் வாகனத்தின் டயர் வெடித்ததன் காரணமாக, கட்டுப்பாட்டை இழந்து கோழி ஏற்றிச் சென்ற வாகனத்துடன் மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது .

இரண்டு பேர் ஸ்தலத்தில் பலி - மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மரணித்தவர்களில் ஒருவர் தைக்கா வீதி, ஏறாவூர் -01 ஐ சேர்ந்த வதுறுதீன் ஹில்மி ஹசன்(25) என தெரியவந்துள்ளது.