தவறுகளை திருத்திக் கொண்டு நாளை முதல் புதிய அரசியல் பாதையில்




கடந்த காலத்தில் கற்ற பாடங்களின் அடிப்படையில் தவறுகளை திருத்திக் கொண்டு புதிய அரசியல் பாதை ஒன்றில் செல்லவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கேகாலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரை இன்று அறிவித்ததன் பின்னர் தவறுகளை திருத்திக் கொண்டு நாளை முதல் புதிய அரசியல் பாதை ஒன்றில் பயணிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.