மாவடிமுன்மாரியில் ஆசிரியர் விடுதி திறந்து வைப்பு


(படுவான் பாலகன்)
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ஆசிரியர் விடுதியை இன்று(10) செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் திறந்து வைத்தார்.

கல்வி அமைச்சின் பண்பு, அறிவு மற்றும் வலுமிக்க மனிதநேய மாணவச் சந்ததியினரை உருவாக்கும் நோக்கில், அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆசிரியர் விடுதி  கட்டிடமே திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் பி.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் சீ.புஸ்பலிங்கம்;, மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன், பிரதிக்கல்விப் பணிப்பாளர் க.ஹரிகரராஜ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.