(படுவான் பாலகன்)
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிப்பளை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வளநிலையத்தினை இன்று(10) செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் திறந்து வைத்தார்.
கல்வி அமைச்சின் பண்பு, அறிவு மற்றும் வலுமிக்க மனிதநேய மாணவச் சந்ததியினரை உருவாக்கும் நோக்கில், அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வளநிலைய கட்டிடமே திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் த.தியாகராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், பிரதேசசபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4