அரச நிர்வாக சேவையை சேர்ந்த சகல ஊழியர்களும் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறையில் சென்று சேவைக்கு சமூகமளிப்பதில்லை எனத் தீர்மானித்துள்ளனர். மற்றும் அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் , அரச நிர்வாக சேவை அதிகாரிகள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் காலப்பகுதியில், அரசாங்க நிறுவனங்களின் பணிகள் ஸ்தம்பிதமடையலாமென சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சம்பள முரண்பாடு உட்பட சில காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
எனினும் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை நியாயமற்றது என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.