காட்டு யானை தாக்கியதில் பாட்டியும் பேத்தியும் பலி

அம்பாறை சுஹதகம பகுதியில் காட்டு யானை தாக்கியதில் சிறுமி ஒருவரும் வயோதிபப் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு (10) 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

4 வயதான சிறுமியும் 50 வயதான குறித்த சிறுமியின் பாட்டியுமே இவ்வாறு யானைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

அப்பகுதியிலுள்ள சந்தைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்புகையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.