சஜித்திற்கு ஆதரவு; அவருக்கே வாக்களியுங்கள் ! த.தே. கூட்டமைப்பு மக்களிடம் கோரிக்கை



தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு; மக்களிடம் கோரிக்கை

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு தமது ஆதரவை வழங்குவதாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அக்கட்சி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.


அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இவ்விரு வேட்பாளர்களினதும் முன்னைய செயற்பாடுகளுடன் சேர்த்துப் பார்க்கப்படும் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்கள் பற்றிய ஒரு பரிசீலனையானது, புதிய ஜனநாயக முன்னணியின் சஜித் பிரேமதாசவின் வேட்பிலும் நிகழ்ச்சித் திட்டங்களிலும் கொள்கைகளிலும் நம்பிக்கை வைப்பதுதான் சரியான செயலாக அமையும் என்பதை எடுத்துக்காட்டுவதால் குறித்த முடிவுக்கு வந்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக முக்கிய முனைகளில் அவர்களது முன்னைய செயற்பாடுகளையும் அவரவர் தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையிலான எதிர்காலச் செயற்பாடுகளையும் கவனத்தில் கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) - இலங்கைத் தமிழரசுக் கட்சி அனைத்து மக்களையும், குறிப்பாக தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களை அன்னம்சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.