ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு இன்றும்



ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பில் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு இன்று (07) அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இதன்பிரகாரம், இன்று காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு கடந்த 31ஆம் திகதி மற்றும் நவம்பர் முதலாம், 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது.

இந்த நாட்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாமல் போனவர்கள் இன்றைய தினம் தமது அலுவலகங்களுக்கு அருகிலுள்ள மாவட்ட செயலங்களில் தமது வாக்குகளைப் பதிவு செய்ய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு 6 59 504 பேர் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.