அதிவேக நெடுஞ்சாலையின் மேலும் சில பகுதிகள் நாளை திறப்பு



தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்த - கெரவலபிட்டிய வெளிச்சுற்று வீதி மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஹம்பாந்தோட்டை வரையிலான மூன்றாம், நான்காம் பகுதிகளும் நாளை திறந்து வைக்கப்படவுள்ளன.

அந்தரவௌ பிரதேசத்திலிருந்து மத்தள வரையிலான மூன்றாவது பகுதி 21 கிலோமீற்றர் நிளமானதாகும். நான்காவது கட்டம் 16 கிலோமீற்றர் நீளம் கொண்டதாகும். இந்த நெடுஞ்சாலையின் முதலாம், இரண்டாம் பகுதிகளை இம்மாத இறுதிக்குள் பூர்த்தி செய்வது இலக்காகும் என வீதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் கமல் அமரவீர தெரிவித்துள்ளார்.

வெளிச்சுற்று வீதி நாளை திறக்கப்பட்டதன் பின்னர் கட்டுநாயக்கவிலிருந்து அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக மாத்தறை வரை செல்வதற்கான வாய்ப்பு எதிர்வரும் 9ஆம் திகதி முதல் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.